ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பது நடிகர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நன்றாகவே புரிந்திருக்கும். இருவரும் அரசியல் சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசும் போதும், பதிவிடும் போதும் அவற்றுக்கு எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்டவர்கள் அவர்களை விமர்சிப்பதைச் செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். ஆனால், ரஜினிகாந்த் இதுநாள் வரையிலும் பட்டும், படாமலும் பேசி வந்தார். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசை எதிர்த்து அவர் கருத்து சொன்னதும் அவருக்கு அதிகமான எதிர்ப்புக் குரல்களும் எழுந்தது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே அவருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ரஜினிகாந்தும் காவிரி விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கமல்ஹாசன் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால், இருவர் மீதும் கர்நாடகாவில் அதிருப்தி நிலவ ஆரம்பித்துள்ளது. அதனால், அவர்களின் படங்கள் கர்நாடகாவில் வெளிவருவதில் சிக்கல் ஆரம்பமாகிவிட்டது.
அங்கு கர்நாடக எதிர்ப்பையும், இங்கு மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி இருவரும் அரசியல் செய்துவிடலாம். ஆனால், அவர்களது படங்களை திரையிட்டுவிட முடியுமா ?, அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.