ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு, மற்ற பணிகள் எதையும் கடந்த மாதம் மார்ச் 16ம் தேதியிலிருந்து நடத்த வேண்டாம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து பலரும் அவர்களது வேலைகளைத் தள்ளி வைத்தார்கள்.
விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்ததும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், அந்த படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டார்கள். விஜய் சேதுபதி மட்டும் யார் பேச்சையும் கேட்காமல் வெளிநாட்டிற்குச் சென்று 'ஜுங்கா' படப்பிடிப்பை நடத்தினார்
இதனிடையே, நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாரித்து வரும் 'யு டர்ன்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் படங்களுக்கு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று சொல்லி அனைவரும் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சமந்தாவின் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயார் ஆவதால் அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
சமீப காலங்களில் தெலுங்கில் எடுக்கப்படும் பல படங்களை, தமிழ், தெலுங்கு என எடுப்பதாகச் சொல்லி ரசிகர்களை பலர் ஏமாற்றி வருகிறார்கள். சமந்தா உண்மையிலேயே அந்தப் படத்தை தமிழில்தான் எடுக்கிறாரா இல்லையா என்பது இனி நடக்கப் போகும் படப்பிடிப்பு வைத்து அறிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு நடந்தால் அது தெலுங்குப் படம் மட்டுமே, நடக்கவில்லை என்றால் அது தமிழ்ப் படமும் கூட....!