ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் 'மெர்சல்'. விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் வெளியாகி பல சர்ச்சைகளை உருவாக்கியது. அதோடு வசூலும் குவித்தது. ஆனாலும் மெர்சல் வெற்றிப்படமா தோல்விப்படமா என்ற சர்ச்சை இன்னும் நிலவுகிறது. காரணம்... மெர்சல் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் இன்னும் அடுத்தப்படத்தை தொடங்கவில்லை.
இந்நிலையில், மெர்சல் படம் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் திரையிடப்பட்டது. அந்தவிழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக 'மெர்சல்' செய்யப்பட்டதோடு விருதும் வழங்கப்பட்டது.
இந்த செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் 'மெர்சல்' எங்களது பெருமைக்குரிய தயாரிப்பு என்று இந்த படத்தை தயாரித்த 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மெர்சல் தயாரிப்பாளரை கடனாளியாக்கிய இயக்குநர் அட்லீயை வைத்து யாரும் படம் எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் அம்மா டி.சிவா, அட்லிக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க கூடாது. எந்த ஹீரோவும் தேதி கொடுக்ககூடாது என கோபமாக பேசினார்.