ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக யாரும் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை நடத்தக் கூடாதென தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. ஆனால், அதையும் மீறி விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் வெளிநாடு சென்றார்கள். அவர்கள் மட்டும் வெளிநாடு சென்றதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அது பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமல் இருக்கிறது.
இதனிடையே, போர்ச்சுகல் நாட்டுக்கு சென்ற படக்குழுவினர் அங்கிருந்து அஜர்பைஜான், ஜார்ஜியா என 'மெர்சல்' படப்பிடிப்பு நடந்த நாடுகளுக்கு சென்று அங்கும் படமாக்கியுள்ளனர். இன்னும் ஒரு பாடலையும், சில காட்சிகளையும் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடுமாம்.
இந்தப் படத்தை விஜய்சேதுபதியின் மைத்துனர் ராஜேஷ்தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஏறக்குறைய விஜய்சேதுபதிதான் தயாரிப்பாளர். ஒரு நடிகராகவும் இருந்து கொண்டு மற்ற தயாரிப்பாளர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் விஜய் சேதுபதி படப்பிடிப்பை நடத்தி வருவது, அவரை வைத்து படம் தயாரித்த பலரையும் கோபம் கொள்ள வைத்துள்ளது.