சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம்தான் இந்த பிரச்சினைக்கு உகந்த தீர்வு என்று கூறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் முருகன் கூறியிருப்பதாவது:
காவிரி நதி நீர் பிரச்சினையில் உணர்ச்சிவசப்பட்டு எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருப்பதுதான் ரஜினிக்கு நல்லது. கர்நாடகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினி கூறுவதால் இங்குள்ள தமிழர்கள், ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இரு அரசும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தில் அவர் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. நாங்கள் எப்போதும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருப்போம். என்கிறார் முருகன்.
"கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்த ரஜினி கர்நாடக விவசாயிகளுக்கு எதிராக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.