ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசை அமைப்பாளர் இளையராஜா, இயேசுகிறிஸ்து பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது கிறிஸ்தவ மக்களிடையே வருத்தத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதை கண்டித்து இளையராஜா வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்க நிகழ்ச்சியில் இளையராஜா இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றும் மீண்டும் பிறக்கவில்லை என்றும் பேசி தன் மதத்தை உயர்த்தி கூறி கிறிஸ்தவ மதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 7ந் தேதி வள்ளுவர் கோட்டம் முன் பிரமாண்ட போராட்டம் நடத்துவோம். என்றார்.