ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விரைவில் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கும் ரஜினி, அதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை கட்சிக்கான அடித்தளமாக்கி, அதை வலுப்படுத்தி வருகிறார். ரசிகர் நற்பணி மன்றத்துக்கு, தமிழகம் முழுக்க பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகி மீது ஏகப்பட்ட புகார்கள் வர, அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வெளியேற்றினார் ரஜினி. அவர், திண்டுக்கல் மாவட்ட ரசிகர்களை கிளப்பி விட்டு, ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து, மீண்டும் ரசிகர் மன்ற பொறுப்புகளைப் பெற முயற்சித்தார். ஆனால், அதை ரஜினி கண்டு கொள்ளவில்லை.
கட்சித் துவங்குவதற்கு முன்பாகவே இத்தனை கலாட்டாவா? என, அவரின் அரசியல் ஆலோசகர்கள் சிலர் ரஜினியிடமே கேட்டுள்ளனர். அதற்கு, ரஜினி அளித்த பதில் கேட்டு, அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
நீங்கள்லாம் எல்லா விஷயத்தையும் மேலோட்டமா பார்க்குறீங்க. நான் ஆழமா பார்க்கறேன். கட்சித் துவங்குவதறு முன், ரசிகர் மன்றத்தை பலப்படுத்தி நிர்வாகிகள் போடுவதன் முக்கியத்துவமே இதுதான். அவர்கள் மன்றத்தில் சரியாக செயல்பட்டால்தான், அவர்களை, கட்சி நிர்வாகிகளாக நியமிக்க முடியும். மன்றத்துலேயே நிர்வாகிகளாக சரியாக செயல்பட முடியாதவர்களை கழற்றி விட்டு விட்டால், நல்ல நிர்வாகிகள் எஞ்சி இருந்து, அரசியல் இயக்கத்தில் நிர்வாகிகளாக அறிவிக்கப்படுவர். அந்த சமயத்தில், நல்ல நிர்வாகிகள், கட்சிக்கு கிடைப்பர். இதனால், கட்சியின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், கட்சியில் மிகச் சிறப்பாகச் செயல்படுவர். இதுதான், எனது திட்டம் - செயல்பாடு என கூலாக ரஜினி பேசியதைக் கேட்டு, அரசியல் ஆலோசகர்கள் அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.