ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'துருவங்கள் 16' இயக்குனர் கார்த்திக் நரேன், இயக்குனர் கவுதம் மேனன் இடையே பனிப்போர் வெடித்துள்ளது. நரகாசூரன் படத்தை தயாரித்த விதத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை உருவாகி உள்ளது.
கார்த்திக் நரேன் தன் டுவிட்டரில், "உங்களை நம்பி ஜோடி சேர்ந்து, இணைந்தேன். அதற்காக எங்களை குப்பையைவிடக் கேவலமாக நடத்தி, நாங்களே முதலீடு செய்ய வைத்தீர்கள். அதனால்தான் விட்டுச் செல்வது நல்லது என்று நினைத்தேன். தயவு செய்து இதை இன்னொரு இளம் படைப்பாளிக்கு செய்து விடாதீர்கள், வலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு கவுதம் மேனன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
கார்த்திக் நரேனின் டுவீட் என்னை அதிருப்தியடைய செய்தது. மீடியாக்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அதனால் நானும் பதிலுக்கு டுவீட் செய்தேன். நான் அப்படி செய்திருக்க கூடாது, இதற்காக கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
கார்த்திக் நரேனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை எடுக்க வைத்தேன். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்றார், அதையும் செய்தோம். டீஸர், டிரைலர் எல்லாமே அவருடைய முடிவு தான். படத்தின் பிஜிஎம்-ஐ மேசிடோனியாவில் உருவாக்கினார். அதற்கும் ஏற்பாடு செய்தோம். நான் அழைத்து வந்த முதலீட்டாளர் மூலம் நிறைய செலவு செய்ய வைத்தேன்.
நரகாசூரன் படத்தில், நான் 50 சதவீதம் லாபம் கேட்கவில்லை. அந்தப்படத்தில் எனக்கு பங்கு இல்லை. படத்தை விட்டு வெளியேற வேண்டும் என கார்த்திக் விரும்பினால் மகிழ்ச்சி அடைவேன். சிலரின் பேச்சை கேட்டு நரேன் கோபமடைந்து இதுபோன்று செய்கிறார். நரகாசூரன் படத்தின் ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது.
பிற படங்கள் சந்திக்கும் பிரச்னைகளுடன் ஒப்பிடும்போது நரகாசூரன் படத்தின் பிரச்னை ஒன்றுமே இல்லை. ஒரு குழு நல்லபடியாக வேலை பார்த்தால் அதை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். கார்த்திக்கும், எனக்கும் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. விரைவில் படம் ரிலீஸாகும்.
இவ்வாறு கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.