ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏஏஏ படத்தில் நடித்தபோது சிம்பு செய்த அழிச்சாட்டியத்தினால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்துக்குள்ளானார். சுமார் 10 கோடிக்கு நஷ்டமடைந்த நிலையில் சிம்புவிடம் நஷ்டஈடு கேட்டார். அவருக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஸ்டிரைக் குறுக்கிட்டதால் படம் எப்போது முடியும்? எப்போது வெளியாகும் என்பதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளன.
இந்நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் 'றெக்க' படத்தை இயக்கிய ரத்தின சிவா அடுத்து இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.
இவர் ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் 'வா டீல்' என்ற படத்தை இயக்கினார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. றெக்க படமும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.
இந்நிலையில்தான் ரத்தின சிவாவை தன்னுடைய அடுத்தப்படத்தின் இயக்குநராக தேர்வு செய்துள்ளார் சிம்பு. 'செக்க சிவந்த வானம்' படம் முடிந்ததும் அவரது புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.