ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்தது. 'பாகுபலி' படம் விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் செல்லவிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. இது குறித்து ட்வீட்டரில் தகவலை வெளியிட்டிருக்கிறார் ராஜமௌலி.
''பாகுபலி' திரைப்படம் வெளியாகி ஏற்கனவே எனக்கு பல வெளிநாடுகளுக்கு செல்லும் அற்புதமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது 'பாகுபலி', பாகிஸ்தான் - கராச்சியில் நடைபெறும் திரைப்பட விழாவிலும் திரையிடப்படுகிறது. அதன் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் நாட்டுக்கும் செல்லவிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரையும் வைத்து புதியபடத்தை இயக்குகிறார் ராஜமௌலி.
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.