ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி. இவர் தற்போது இயக்குநராகியிருக்கிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
'சக்தி' என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
'சக்தி' படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமாரின் தங்கை பூஜா காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகிறார். ' சக்தி' படத்தை சரண்யா லூயிஸ் என்ற பெண் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்த நீல் நித்தின் முகேஷ் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குநர் பிரியதர்ஷினி, நீல் நிதினை சந்தித்து பேசியிருக்கிறார். கதையை கேட்டும் அவரும் நடிப்பதாக சொல்லியிருக்கிறாராம்.
இதனிடையே நீல் நிதின் முகேஷ், தன் டுவிட்டரில், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை, உறுதியான பின்னர் நானே தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார்.