சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஒரு ஆதார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலாராய பூவி' பாடலில் தனது கண் சிமிட்டல் மூலமாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த பெண்ணாக மாறியவர் பிரியா பிரகாஷ் வாரியர். சில பிரபலங்கள் கூட அவரது ரசிகர்களாக மாறிப்போனார்கள்.
இந்தநிலையில் சமீபத்தில் தமிழ் சேனல் ஒன்றில் ரியாலிடி ஷோவில் கலந்து கொண்டார்கள் இந்த புருவ அழகியும், அந்த பாடலில் இவருடன் சரிக்கு சமமாக புருவம் உயர்த்திய நாயகன் ரோஷனும். இந்நிகழ்வில் அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேச வந்த பிரியாவை பாடலில் நடித்தது போல புருவம் உயர்த்தி காட்டும்படி தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார். பார்வையாளர்களுடன் சேர்ந்து அனிருத்தும், ஆண்ட்ரியாவும் அவர்களை உற்சாகப்படுத்தினார்களாம்.
அதை தொடர்ந்து ப்ரியாவும் ரோஷனும் கொஞ்சமும் தயங்காமல், புருவ சமிஞ்ஞைகளை செய்தனர். இதை பார்த்த அனிருத்தே சற்று அசந்துதான் போனாராம். இதுதவிர இரண்டு பாடல்களையும் பாடினாராம் பிரியா வாரியர்.