ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்ரேயா தனது காதலரான ரஷியாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஷேவை சமீபத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் நரகாசுரன் (தமிழ்), தட்கா (ஹிந்தி), வீர போக வசந்த ராயலு (தெலுங்கு) படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரேயா திருமணத்தால் இந்தப் படத்தை சேர்ந்தவர்கள் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. காரணம் இது எதிலும் ஸ்ரேயா ஹீரோயின் இல்லை.
என்றாலும் திருமணத்திற்கு பிறகு தான் கமிட்டான படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுதான் கணவருடன் ஹனிமூன் செல்வேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தை தேஜா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசப்பட்டது. அவர்கள் சீனியர் நடிகருடன் நடிக்க தயக்கம் காட்டி வந்தார்கள்.
இந்த நிலையில் ஸ்ரேயாவிடம் பேசியபோது அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. "இந்தப் படம் இளமை ததும்பும் காதல் படமல்ல. அழகான குடும்ப படம் என்பதால் திருமணமான ஸ்ரேயா நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை" என்கிறார்கள் தயாரிப்பு தரப்பினர். விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ஸ்ரேயா.