சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
உலகின் நம்பர் ஒன் இயக்குனராக கருதப்படுகிறவர் கிறிஸ்டோபர் நோலன். பிரமாண்ட ஹாலிவுட் படங்களை நுணுக்கமாக எடுக்கிறவர். இரண்டு முறை பார்த்தால்தான் படம் புரியும் என்கிற அளவிற்கு நுணுக்கமான இயக்குனர். இவர் இயக்கிய இன்ஸ்ப்பெஷன், மெமண்டோ, பேட்மேன் பிகின்ஸ், தி பிரஸ்டீஜ் படங்கள் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தவை. சமீபத்தில் இவர் இயக்கிய டன்கிர்க் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் முதன் முறையாக இந்தியா வருகிறார். வருகிற மார்ச் 31ந் தேதி மும்பை டாடா தியேட்டரில் நடக்கும் டிஜிட்டல் சினிமாவின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் கிறிஸ்டோபர் நோலனுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நடிகர்கள் சார்பில் கமல், அமிதாப்பச்சன், ஷாருக்கான் கலந்து கொள்கிறார்கள். இயக்குனர்கள் சார்பில் ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் காஷ்யப், பர்ஹான் அக்தர் பங்கேற்கிறார்கள். கருத்தரங்கிற்கு பிறகு இந்தியாவை சுற்றிப் பார்க்கிறார் நோலன். அவர் மகாபலிபுரம் மற்றும் தஞ்சைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.