ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 16 முதல் சென்னையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரிய மற்றும் சின்ன படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ம் தேதி முதல் வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்பும் நிறுத்தப்பட இருக்கிறது
இந்நிலையில், விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு, சென்னை விக்டோரியா ஹாலில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெரிய நடிகரின் படம் என்பதால் சலுகையா குரல் ஒலிக்க துவங்கி உள்ளன.
இயக்குநர் வெங்கடேஷ், தன் டுவிட்டரில், "இன்றைக்கு விஜய் படம் விக்டோரியா ஹாலில் ஷூட்டிங் நடப்பதாக ஒரு செய்தி. விசாரித்தால் ஏதோ ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நடக்குதாம்.... என்னய்யா இது... ஸ்டிரைக்கில் கூட பாகுபாடா...?" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கூறுகையில், மார்ச் 16 முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற இருக்கும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து சங்க நிர்வாகிகள் விவாதித்தோம். இதில், விஜய்யின் படம் உள்ளிட்ட 4 படங்களை சேர்ந்த படக்குழுவினர், படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்துள்ளார்கள். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் ஓரிரு நாளில் ஒரு ஷெட்யூல் முடிவதால் அதை கருத்தில் கொண்டு சங்கத்தின் அனுமதியோடு ஒப்புதல் அளித்துள்ளோம். யாருக்கும் சலுகைகள் அளிக்கவில்லை.
இவ்வாறு துரைராஜ் கூறியுள்ளார்.