'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாசல், ராஜஸ்தான், சார்லி சாப்ளின், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன், கிழக்கு கடற்கரைசாலை உள்பட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிவர் அனில் மல்நாட். காமெடி படங்களுக்கு பிரபலமானவர். சித்தாரா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
66 வயதாகும் அனில் மல்நாட், முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனில் மல்நாட்க்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.