மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாரி 2'. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. அதற்குள் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகளை முடித்துவிட்டதாக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார். இன்று முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் ஸ்டிரைக் முடிந்த பின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறியுள்ளார்.
'மாரி 2' படத்திற்கு முன்பாக தனுஷ் நடித்துள்ள 'வட சென்னை' படம் வெளிவரலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் கூட்டணி இணைந்துள்ள இந்தப் படத்தில் முதல் முறையாக தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காக யுவன் இசையில் இளையராஜாவும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மாரி' படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.