ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாக கூறிவரும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.
இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.
மேலும், பெரிய நடிகர்களுக்கு வெளியில் கடவுள் போன்றொரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜமுகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. எங்களைப்போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அதனால் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்கிறார் இலியானா.