ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“அவரா, அவரை வைத்து படத்தை நினைத்தபடி எடுக்க முடியாது” என திரையுலகத்திலேயே பலரும் பேசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஹீரோவாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர் சிம்பு.
ஆனால், அவரிடம் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்தான் திரையுலகத்தில் பலரையும் நம்ப வைக்க மறுக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்த போதே பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். சொந்தப் படத்திற்கே சரியாக வராத சிம்பு எப்படி மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மணிரத்னத்திற்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிம்பு.
அனைவருக்கும் முன்பாகவே படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்கிறாராம். சிம்புவைப் பற்றி என்னவெல்லாமோ சொன்னார்களே, இப்போது இப்படி அநியாயத்திற்கு மாறிவிட்டாரே என மணிரத்னமே அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
மணிரத்னம் படத்தில் சிம்பு முதன்முறையாக நடிக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில்தான் இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மாறிய சிம்பு எப்போதோ மாறியிருந்தால் உண்மையிலேயே இப்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகவே மாறியிருப்பாரே என அங்கலாய்க்கிறது கோலிவுட்.