மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சீமராஜா, ரவிக்குமார் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஆரி ஏற்பாடு செய்திருந்த விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னுடைய மகளுக்கு இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை வழங்கியது இல்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்த மாதிரியான விளம்பர படங்களில் நடிக்க முடியும். இங்கே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டோ போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதை விட இன்னும் பெரிதாக விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.