ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ‛டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்னை, சினிமா டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்த ஸ்டிரைக், திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் நடக்கும் படப்பிடிப்புகள் 23ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாகவும் இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை காலவரையறை இன்றி நடக்கவிருப்பதாகவும் அறிவித்தார். இக்கூட்டத்தில் செயலாளர்கள் கதிரேசன் , துரைராஜ் , பொருளாளர் S.R. பிரபு , முன்னாள் நிர்வாகிகள் தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , K.ராஜன் , TG தியாகராஜன் ,
மற்றும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல் நிலையில் சரியில்லாததால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.