ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
க்யூப், யு.எப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் சினிமா சர்வீஸ் வழங்கி வரும் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து, கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உட்பட சினிமா தொடர்பான எந்த விழாவையும் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. அதோடு, மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் போஸ்ட்புராடக்சன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் அறிவைப்பை விமர்சித்து இயக்குநர் அறிவழகன் தைரியமாக டுவீட் செய்துள்ளார். “மார்ச் மாதம் என்பது ஸ்டிரைக் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பாதுகாப்பான, ஈஸியான மாதமாகி விட்டது. ஏப்ரல் மாதம் ஏதாவதொரு பெரிய படம் ரிலீஸாகும். அதற்கு முன்பு இந்தப் பிரச்னையெல்லாம் தீர்ந்துவிடும். இதில் பாதிக்கப்படுவது மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்ட சிறிய படங்கள்தான். அவற்றை ரிலீஸ் செய்வது கஷ்டமான விஷயமாக இருக்கும்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அறிவழகனின் அறிவுப்பூர்வமான கேள்விக்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது கருத்தை மையப்படுத்தி சினிமா துறையினரின் வாட்ஸ்-அப் குரூப்புகளில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.