ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் சீக்கிரமே வெற்றி கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேசிய விருதும் கிடைத்தது. எல்லாமே குறுகிய காலத்திலேயே கிடைத்தது. அதன்பின்னர் சறுக்கல்களும் ஏற்பட்டது.
ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பாபி சிம்ஹா. கருப்பன் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 'கம்மர சம்பவம்' என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஜிகர்தண்டா' படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு. 'சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். 'சவாரி' படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகிறது.
பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலை தயாரிக்கின்றனர்.