ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்தடுத்த போராட்டங்களால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய படங்கள் வெளிவராததால் வசூல் பார்க்க முடியாமல் தயாரிப்பாளர்களும், படங்களை பார்க்க முடியாததால் பொழுதுபோக்க முடியாமல் ரசிகர்களும் தவித்து வருகிறார்கள்.
இந்த போராட்ட சமயத்தில் எந்தத் தயாரிப்பாளரும் எந்த ஒரு விழாவையும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் மீறி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா நோட்டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை கடந்த வாரம் நடத்தினார். அதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவருக்கு ரெட் போடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
விழா நடத்தியது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கேட்ட விளக்கத்திற்கு கே.ஈ.ஞானவேல்ராஜா பதிலளித்துவிட்டதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஞானவேல்ராஜாவும் நோட்டா படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டாராம்.