ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. தமிழ் பாடல்களுக்குத் தனியாகவும், தெலுங்குப் பாடல்களுக்குத் தனியாகவும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பாடலைப் பாடும் போதும், அந்தப் பாடல் தொடர்பான விவரங்களைப் பற்றியும் அவர் சுவாரசியமான தகவல்களைக் வறி வருகிறார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கு இடையில் அவர் பேசிய போது, நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்தானே உங்க கூட வர்றேன் என பெருமிதத்துடன் பேசினார்.
“ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கதை சொன்னால், அதுவே பெரிய நிகழ்ச்சியா இருக்கும். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கதை இருக்கு. அது வேண்டாம், நமக்கு கதையா வேணும், இசைதானே வேணும்.
எவ்வளவு பேரு படத்தை ஞாபகம் வச்சிக்கிட்டு, பாட்டு கேட்கறீங்க, கிடையவே கிடையாது. இப்ப, பாட்டைக் கேட்டீங்கன்னா விஷூவல் ஞாபகத்துக்கு வராது. அங்க பார்க்கிற நேரத்துல கைதட்டறீங்க. இங்க வந்து பாட்டைக் கேட்டதும் அந்த டியூனோட ஒன்றி, உங்களையும் மறந்துடறீங்க.
உங்க வாழ்க்கையோட ஒவ்வொரு சம்பவத்துலயும், இந்தப் பாடல்கள், இந்த இசை இருக்கு. இங்க இருந்து 200 கிலோமீட்டர் கார் போனீங்கன்னா, நான்தானே உங்க கூட வர்றேன். அந்தப் பாடல்கள் இல்லாம நீங்க வாழவே முடியாது,” என்று பலத்த ஆரவாரத்துக்கிடையே தெரிவித்தார்.