ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில் இப்போது அவரது முதல் படமாக கரு வெளிவர உள்ளது. இந்த படத்தில நான் அம்மா வேடத்தில் நடிப்பதை சிலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், கரு படத்தின் கதை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் சாய் பல்லவி.
அவர் கூறுகையில், மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த கதை எப்படி என்னை பாதித்ததோ அதே போன்று தான் பிடா தெலுங்கு படத்தின் கதையும் என்னை பாதித்தது. அதனால் தான் தமிழிலும் அதுபோன்ற ஒரு நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்று வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்.
அப்போது இயக்குநர் விஜய், என்னை தொடர்பு கொண்டு இந்த மாதிரி ஒரு கதை உள்ளது. நடிக்கிறீர்களா? என்று கேட்டார். முதலில் எனக்கு அந்த கதை பெரிதாக தெரியவில்லை. அதனால் நடிக்கவில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் அதன்பிறகு அவர் எனது அம்மாவை சந்தித்து கரு படக்கதையை சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு அந்த கதை பிடித்துப்போக அதன் ஆழம் பற்றி என்னிடம் சொன்னார்.
அதன்பிறகு நான் முழுக்கதையையும் கேட்டேன். கதையை கேட்க கேட்க அது என்னை ஈர்த்து விட்டது. எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கரு படத்தின் கதை. அதனால் பிரேமம், பிடா படங்களை விட இந்த படம் தமிழில் எனக்கு ஒரு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார் சாய் பல்லவி.