ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் மரணம் அடைந்தார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் அவரது அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதேப்போன்று சென்னையில், நேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் குடும்பத்தார், அரசியல் பிரமுகர் அமர் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பழம்பெரும் நடிகை லதா, தயாரிப்பாளர் தாணு, ஏ.ஆர்.ரஹ்மான், இவரின் மனைவி, மீனா, ராதிகா, வினித், கே.எஸ்.ரவிக்குமார், சுஹாசினி, சோனியா அகர்வால், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், குட்டி பத்மினி, ரோகினி, பாக்யராஜ், கார்த்தி, சினேகா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர்.
ஸ்ரீதேவி அஞ்சலி கூட்டம் நடந்த ஹால் முழுக்க வண்ண மலர்கள் அங்கரிக்கப்பட்டிருந்தது.