ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் ரஜினி, 15 நாள் பயணமாக நேற்று (மார்ச் 10) காலை இமயமலை புறப்பட்டு சென்றார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இமயமலை சென்றுள்ளார்.
இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாகவும், தர்மசாலாவில் இருந்து இமயமலைக்கு செல்ல உள்ளதாகவும் ரஜினி கூறி இருந்தார். அங்கிருந்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளதாக ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
இந்நிலையில் இமாச்சல் சென்றடைந்த ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அங்கு ரஜினியின் ரசிகர்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தர்மசாலாவின் கன்படி கிராமத்தில் உள்ள தியான மையத்திற்கு சென்றார். இங்கு ரஜினி வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மீடியாக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இமாச்சல முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலும், மகாஅவதார் பாபா ஆசிரமத்தில் உள்ள தியான மையத்திற்கு சென்றுள்ளார். இந்த தியான மையத்தில் ரஜினி 10 நாட்கள் வரை தங்க உள்ளதாக கூறப்படுகிறது.