ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மார்ச் 16 முதல் ரத்து செய்யப்படுவதாக தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக்கின் படி கடந்த மார்ச் 1 தேதி முதல் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது.
இதன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று FEFSI அமைப்பின் ஒப்புதலோடு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் படி சினிமாவின் நலன் கருதி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.