ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுகன்யாவிடம், நடிப்பிற்கு ஏன் இவ்வளவு இடைவெளி என்று கேட்ட போது அவர் கூறியதாவது.... நான் சிறந்த பரதநாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால், புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகையாக கால் பதித்தேன். முதல் படத்தில் நான் நெப்போலியன் உட்பட 8 பேர் புதுமுகங்கள்.
அறிமுகமான முதல் படத்திலேயே எனக்கு ஒன்பது விருதுகள். தொடர்ந்து நான் நடித்த சின்னகவுண்டர் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியாக இருந்தேன். அது என் வாழ்வின் பொற்காலமாக உணர்கிறேன்.
இப்போது வாரா வாரம் தமிழ் புதுப்படங்கள் வருவதை பார்த்து கொண்டு இருக்கிறேன். நல்ல கதையுள்ள சில படங்கள் வருகிறது. டெக்னாலஜி அதிகமாகவே வளர்ச்சி அடைந்து உள்ளது. கருத்து சுதந்திரம் எங்கும் பரவி வருகிறது. நான் அதிகமாக பேசி பழகாதவள், ஆனால் நடப்பதை கவனித்து வருகிறேன்.
எல்லாம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பெரும் பேச்சாக உள்ளது. இவர்கள் வருகை குறித்து தினம் என்னிடம் கருத்து கேட்கின்றனர். ஆனால் எனக்கு பதில் சொல்வதில் பெரிய உடன்பாடு இல்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர்.
நடிப்பில் இப்போது சில படங்கள் வருகிறது. தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் எனக்கு நல்ல பேர் கிடைத்துள்ளது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க உள்ளேன். நிறைய படங்கள் என்பதை விட நல்ல நல்ல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். மக்கள் என்னை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள், நானும் அவ்வளவு சீக்கிரம் மக்களை மறந்து கடந்து போக முடியாது.
இவ்வாறு சுகன்யா பேசினார்.