ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் புகழ் சாய் பல்லவியை, தெலுங்கு நடிகர்கள், சற்று மிரட்சியுடன் தான் பார்க்கின்றனர். சாய் பல்லவி, அடுத்ததாக, கரு என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம், தெலுங்கில், கனம் என்ற பெயரில், ஒரே நேரத்தில் தயாராகிறது. இதில், ஹீரோவாக இளம் தெலுங்கு நடிகர், நாக சவுரியா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பின்போது, சாய் பல்லவி, தனக்கு இடையூறு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, கதறி அழாத குறையாக புகார் கூறியிருந்தார், நாக சவுரியா. சாய் பல்லவியோ, 'எனக்கும், நாக சவுரியாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்னைப் பற்றி, அவர், ஏன் இப்படி கூறினார் எனத் தெரியவில்லை' என, 'டேக் இட் ஈசி'யாக கூறியிருந்தார்.
ஆனாலும், சாய் பல்லவி மீதுள்ள கோபம், நாக சவுரியாவுக்கு இன்னும் தீரவில்லை
போலிருக்கிறது. சமீபத்தில், கனம் படத்தின் விளம்பர நிகழ்ச்சி, ஐதராபாதில் நடந்தது. இதில், படத்தின் ஹீரோவான, நாக சவுரியா பங்கேற்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு ஹீரோக்கள், 'அந்த பொண்ணு, அந்த அளவுக்கா, நாக சவுரியாவுக்கு மன உளைச்சலை
ஏற்படுத்தியது' என, சாய் பல்லவியை பற்றி, ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.