ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருச்சி, திருவெறும்பூரில், இன்ஸ்பெக்டர் காமராஜ் உதைத்ததில், கணவருடன் டூவிலரில் சென்ற உஷா என்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. மக்களை காக்க வேண்டிய போலீசாரே, மக்களை காவு வாங்குகின்றனர் என்ற கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த மகளிர் தின மாநாட்டில் கமல்ஹாசன் அறிவித்தார்.
தொடர்ந்து கமல் பேசுகையில், தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன், வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை, எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும் நியாயமும் தெரியும்.
எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள், எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர்.
திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுசாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்
இவ்வாறு கமல் பேசினார்.