ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பத்திரிகையாளர் மு.மாறன் இயக்கத்தில், அருள்நிதி, மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள். மரகத நாணயம் படத்தை தயாரித்த 'ஆக்சஸ் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ரெடியாகி சில மாதங்களாகின்றன.
சரியான ரிலீஸ் தேதிக்கு காத்திருந்த தயாரிப்பாளர், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டார். இந்நிலையில் இப்படத்தின் சென்சார் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு சென்சாரில் 'U/A' சான்று வழங்கியிருக்கிறார்கள். அருள்நிதி, மகிமா நம்பியார் ஆகியோருடன் அஜ்மல், வித்யா பிரதீப், முதலானோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' படத்துக்கு இசையமைத்த சாம்.சி. இசை அமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படம், விளம்பர நிர்வாகத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜாவின் 24 பிஎம் நிறுவனம் கவனிக்கிறது.