ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் பிரமாண்ட படம் 2.0. ரஜினி, அக்ஷ்ய், எமி நடிக்க, ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
2.O பட டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே சமூகவலைதளங்களில் வெளியானது. லண்டனில் லைகா டெலிகாம் நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சிலருக்கு இந்த டீசர் எல்இடி திரை மூலம் போட்டு காண்பிக்கும் போது யாரோ ஒருவர், மொபைலில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் லீக் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
டீஸர் வெளியானதால் படக்குழு ரொம்பவே அப்செட், குறிப்பாக, தன் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கடுகளவு கூட கசிய விடாத ஷங்கர், டீஸர் வெளியானதும் மிகவும் அப்செட்டாகிவிட்டார்.
ஏற்கனவே படம் வெளியாக தாமதமாகி வரும் நிலையில், டீஸரையாவது வெளியிடலாம் என ஷங்கர் எண்ணியிருந்தார். இப்போது இந்த சம்பவத்தால் புதிய டீஸரை வெளியிட எண்ணியுள்ளார். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.