சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இதனை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார்.
கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:
நான், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவன். நெல்லை மக்களின் வாழ்வியல் பற்றி பல சினிமாக்கள் வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இன்றைக்கு நெல்லை மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடி பதிவு செய்கிற படம் இது. நான் எழுதிய மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வந்த மனிதர்களை காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
ஒரு தலைமுறை மாற்றத்தின்போது என்னென்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை. நெல்லை மண் மணமும், நெல்லை தமிழுமாய் புதிய சினிமாவாக இது இருக்கும். கதிரும், ஆனந்தியும் சட்டக்கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். என்றார் மாரி செல்வராஜ்.