ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய சினிமாக்களில் உள்ள முக்கிய இயக்குனர்களில் மணிரத்னம் குறிப்பிடத்தக்கவர். 1983ல் பல்லவி அனு பல்லவி என்ற கன்னட படத்தில் இயக்குனராக அறிமுகமான அவர், பின்னர் உணரு என்ற மலையாள படத்தை இயக்கினார். 1985ல் பகல் நிலவு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து இதயகோயில், மெளனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனரானார்.
தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற மல்டி ஹீரோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் மணிரத்னத்தின் 38வது படமாகும். அந்த வகையில் கடந்த 35ஆண்டுகளாக படங்கள் இயக்கி வருகிறார் மணிரத்னம்.
மேலும், மணிரத்னம் புனேயிலுள்ள இன்ஸ்டிடியூட்டில் படித்து விட்டு நேராக படம் இயக்க வந்து விட்டார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரும் ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறாராம். இந்த தகவலை நேற்று சென்னையில் நடைபெற்ற அபியும் அனுவும் என்ற படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட சுஹாசினி மணிரத்னம் தெரிவித்தார்.
அதுபற்றி சுஹாசினி கூறுகையில், மணிரத்னம் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர், இன்ஸ்டிடியூட்டில் இருந்து வந்த பிறகு பி.ஆர்.ரவீந்திரன் கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கிய ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகுதான் மணிரத்னம் தனித்து படம் இயக்கினார். ஆனால், இந்த விசயம் வெளியில் தெரியாததால் அவர் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் சுஹாசினி.