ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு, தேர்தல் நடைபெற்றது.
இதுவரை பொறுப்பில் இருந்த நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும், ரத்னகுமார் தலைமையிலான ராம ராஜ்யம் அணியும் போட்டியிட்டனர். தலைவர், துணை தலைவர்(3), பொருளாளர், பொதுச் செயலாளர், இணை செயலாளர்(3), செயற்குழு உறுப்பினர்கள்(14) ஆகிய பதவிகளுக்கு இரு அணி சார்பிலும் உறுப்பினர்கள் போட்டியிட்டனர்.
சென்னை, ஆற்காடு சாலையில் உள்ள பரணி ஸ்டூடியோவில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. சூர்யா, விஜய்சேதுபதி, சுந்தர் சி, பார்த்திபன், பாண்டியராஜன், சுகன்யா, குட்டி பத்மினி, ராதாரவி, ரோகினி, நெப்போலியன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் ஓட்டளித்தனர்.
மொத்தம் 1600 பேர் உறுப்பினர்களாக கொண்ட இந்த சங்கத்தில் 960 ஓட்டுகள் பதிவாகின. முதலில் தலைவருக்கான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ராதாரவி, 100க்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரது அணியினரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.