ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஈரோட்டை சேர்ந்தவர் கதிர். மதயானைகூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, படங்களில் நடித்தார். தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், சிகை படங்களில் நடித்து வருகிறார்.
கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் வாசுதேவன், ஜெயந்தி தம்பதிகளின் மகள் சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சஞ்சனா, பிசினஸ் படிப்பில் பட்டம் பெற்றவர். இவர்கள் திருமணம் வருகிற 4-ம் ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணிக்கு ஈரோடு வேலாயுதசாமி கோவிலில் நடக்கிறது. முதல் நாள் (3ந் தேதி) மாலை 6 மணிக்கு பெருந்துரை மேட்டுக்கடையில் உள்ள ஸ்ரீதங்கம் மஹாலில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
"இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்களாக பார்த்து நிச்சயித்த திருமணம். மணப்பென் உறவுக்காரரும் அல்ல. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது" என்றார் கதிர்.