ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவை ஒழித்துக்கட்ட தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக அவரின் தந்தை டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது தி.நகர் வீட்டில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் டி.ராஜேந்தர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிம்புவின் படம் வெளியாகி 6 மாதத்திற்கு பிறகு ஒரு விழாவில் அவருக்கு ரெட் கார்டு போடுவேன் என பேசுகிறார்கள். சிலரின் தூண்டதலால் இது நடக்கிறது. மைக்கேல் ராயப்பன் ரவுடிகளை அழைத்து வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் மிரட்டினார்.
சிம்புவை ஒழித்துக்கட்ட தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. முதலில் வரியை குறைக்க தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்கட்டும். தயாரிப்பாளர் சங்கம் என்றால் சிங்கம் மாதிரி இருக்க வேண்டும், ஆனால் அசிங்கமாக இருக்கிறது. சிம்புவிடம் தெம்பும், ரசிகர்களின் அன்பும் உள்ளது, எல்லா பிரச்னையையும் மீறி சிம்பு வெற்றி பெறுவார்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.