ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் தயாரிப்பாளர் நாகிரெட்டி. பாதாள பைரவி, குணசுந்தரி, மிஸ்சியம்மா, மாயா பஜார், எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை உள்பட 50க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்தவர். சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை கட்டியவரும் அவர்தான். அவரது நினைவாக தற்போது தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வெளியிட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது: நாகி ரெட்டி, சினிமாத்துறையில் சாதனை படைத்தார், நல்லவர். அவர் எடுத்த படங்கள் நீண்ட நாட்கள் ஓடின. அவரை பின்பற்றி படம் எடுத்தால் நல்லது. அவருடைய படங்கள் அழகாகவும் இருந்தன. அப்போதைய படங்களில் செக்ஸ், வன்முறை இல்லை. அவை இருந்தால் தான் படம் ஓடுகிறது என்று நினைக்க வேண்டாம். செக்ஸ், வன்முறை இல்லாத சினிமா படங்களை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன், தபால் துறை அதிகாரி சம்பத், விஜயா மருத்துவமனை குழும இயக்குனர் வெங்கட்டராம ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.