விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சேவை வழங்கும் கியூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைப்பது, அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வற்காக வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள், மாநில திரைப்பட சங்க நிர்வாகிகள் ஆகியோர் கியூப், யுஎப்ஓ நிறுவனங்களுடன் ஐதராபாத், சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பெங்களூருவில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்கள் அனைத்தும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.