ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
10வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல்வர் சித்தராமய்யா இதனை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் மூத்த இயக்குனர் ராகேஷ் ஓம்.பிரகாஷ், நடிகர் சிவராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற மார்ச் 1-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 68 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டிலிருந்து ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் படமும், பிரசன்னா இயக்கிய எழுத்தாளர் அசோகமித்ரன் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
இது தவிர சர்வதேசம், ஆசியா, இந்தியா, கன்னடம் ஆகிய பிரிவின் கீழ் போட்டிப்படங்களும் திரையிடப்படுகிறது. பெங்களூர் ஓரியன் மாலில் உள்ள 11 திரையரங்குகளில் இந்த படங்கள் திரையிடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலிருந்து இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் வந்திருக்கிறார்கள்.