ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. பல படங்களில் நடித்து விட்டபோதும் இன்னமும் அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. நடிக்கிற படங்கள் தோல்வியை தழுவிக்கொண்டே வருவதால் பின்தங்கியே இருந்து வருகிறார். இருப்பினும், விஜய், விக்ரம் உள்ளிட்ட சில நடிகர்கள் சினிமாவில் போராடித்தான் பெரிய இடத்துக்கு வந்தார்கள். அதனால் அதேபோல் எனக்கும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் கண்டிப்பாக உள்ளது என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சாந்தனு.
தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த காதல், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடிக்க வேண்டியவர் சாந்தனு தான். ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த படங்களில் சாந்தனுவுக்குப் பதிலாக வேறு நடிகர்கள் நடித்தார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு படவிழாவில் மிஷ்கின் பேசும்போது, நான் இயக்கி நடித்த நந்தலாலா படத்தில் முதலில் நடிக்கயிருந்தவர் சாந்தனு தான். அவர் அந்த கதையில் நடிக்க மறுத்ததால் நானே நடித்தேன் என்று பேசினார். அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த சாந்தனு, அவர் அப்படி பேசுவதை ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி, அப்படி சொல்லாதீங்க. இப்படி சொல்வதால், மற்ற டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்ல வரவே தயங்குகிறார்கள் என்று சொல்ல, அந்த பேச்சை அதோடு நிறுத்தி வேறு விசயங்களை பேசத் தொடங்கினார் மிஷ்கின்.