ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துருவங்கள் 16 படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாகியிருப்பவர் நடிகர் ரகுமான். இவர் தனது படங்களின் ஆடியோ விழாக்கள் தவிர மற்ற படவிழாக்களில் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற "ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல" என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது ரகுமான் பேசுகையில், இந்த படத்திற்கு ஹீரோ முடிவு செய்வதற்கு முன்பு, புதுமுக இயக்குனரிடம் இந்த கதையை கேளுங்கள் என்று அவரை என்னிடம் அனுப்பி வைத்தார் ஏ.ஆர்.ரெஹானா. நானும் அந்த படத்தில் என்னை நடிக்க வைக்கத்தான் கதை கேட்க சொல்கிறார்கள் என்று நினைத்து கதை கேட்டேன். கதை நன்றாக இருந்ததால் அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். அதையடுத்து என்னிடம் கால்சீட் கேட்பார்கள் என்று பார்த்தால், புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பதாக சொன்னார்.
அதன்பிறகுதான் வேறு நடிகர் நடிக்கும் படத்திற்கான கதையைத்தான் நம்மை கேட்க வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரெஹானா, எனக்கு வாய்ப்புத் தருவது மாதிரியே பேசி என்னை ஏமாற்றி விட்டார் என்று ஜாலியாக பேசினார்.
நான் துருவங்கள் 16 படத்தில் நடித்து முடித்தபோது, அது பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் படம் வெளியானபோது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்தது. அதேபோல்தான் இந்த ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல படமும் ரசிகர்களால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறேன் என்றார் ரகுமான்.