ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை தற்போது சினிமாவாக தயாராகி வருகிறது. தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் படமாகி வருகிறது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா, துல்கர் சல்மான் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாவித்திரியுடன் நடித்த ஜமுனா என்னிடம் கேட்காமல் எப்படி சாவித்ரி வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சாவித்திரியோடு நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிருடன் இருக்கிறேன். சாவித்திரியை பற்றி எனக்குத்தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையை படமாக்குவது வேதனையாக இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக நடிப்பவருக்கு தெலுங்கு தெரியாது. மொழி தெரியாத அவரால் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்?
சாவித்திரிக்கு சென்னையில் 3 பங்களா வீடுகள் இருந்தன. அவரை மாதிரி சினிமாவில் எந்த நடிகையும் சம்பாதிக்கவில்லை. வீட்டில் நீச்சல் குளம் கட்டி இருந்தார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கி இருந்தார். கொடைக்கானலிலும் வீடு இருந்தது. ஆனால் அந்த சொத்துகள் அனைத்தும் எப்படியோ கரைந்து போனது. கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி, உடல் மெலிந்து துரும்பாகி கோமாவிலேயே இறந்துபோனார். இப்படி அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி சாவித்ரி வாழ்க்கையை படமாக எடுக்க முடியும்?. அவரைப்பற்றி அதிகம் அறிந்தவள் நான் தான் என்கிறார் ஜமுனா.