ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்புகளை தன்னுடைய படத்துக்கு சூட்ட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குலேபகாவலி ஏற்கனவே வெளியான படத்தின் தலைப்புதான்.
தற்போது அவர் நடித்து வரும் 'லட்சுமியும் ஏற்கனவே வந்த படத்தின் தலைப்புதான். இந்தவரிசையில் இன்னொரு படமும் சேர்கிறது. மெர்குரி', 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின்-2', 'லட்சுமி' என பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபு தேவா, மற்றுமொரு படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஆகாஷ் சாம் இயக்கும் இந்த படத்திற்கு 'ஊமை விழிகள்' என டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள்.
ஆபாவாணன் தயாரிப்பில், அரவிந்த்ராஜ் இயக்கத்தில், விஜய்காந்த் நடிப்பில் 1986-ல் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'ஊமை விழிகள். இந்தப் படத்தின் டைட்டிலை தன்னுடைய படத்துக்கு சூட்டியதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என நினைக்கிறாராம் பிரபுதேவா.
உமேஷ், சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்குரி' ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் ரெடியாக இருக்கும் 'யங் மங் சங்', சார்லி சாப்ளின்-2', 'லட்சுமி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.