ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெப்சியில் உள்ள சங்கங்களில் முக்கியமானது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம். படங்களின் கதைகளை இங்குதான் பதிவு செய்ய வேண்டும் என்பதால் இது முக்கியமான சங்கமாக கருதப்படுகிறது. தற்போது இதன் தலைவராக இயக்குனர் விக்ரமனும், செயலாளராக பாடலாசிரியர் பிறைசூடனும், பொருளாளராக இயக்குனர் ரமேஷ் கண்ணாவும் உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். இப்போது இருக்கும் நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால், மீண்டும் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வரும் மார்ச் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் அதிகாரியாக சென்னை ஐகோர்ட் வக்கில் ச.செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.