14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா, இசை அமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தாயார். சில படங்களுக்கு இசை அமைத்த ரெஹானா, தற்போது ஏண்டா தலைல எண்ண வெக்கல என்ற படத்திற்கு இசை அமைத்திருப்பதோடு அதன் நிர்வாக தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.
சின்னத்திரை புகழ் அசார் உடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். வம்சிதரன் முகுந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் கார்த்தி இயக்கி உள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு படத்திற்கு நிர்வாக தயாரிப்பாளரானது எப்படி என்பது குறித்து ரெஹானா கூறியதாவது:
நான் கனடா போனபோது ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்த பிறகும் அவங்க கேட்டு கொண்டே இருந்தாங்க. நானும் நிறைய பேரை பார்த்தேன். அதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம் தான் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். அவர் சொன்ன கதையும் நன்றாக இருந்தது. அசார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு பஞ்சமில்லை என்றார் ஏஆர்.ரெஹானா.