மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தென்னிந்திய சினிமாவில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் திருமண வயதை கடந்த பிறகுதான் இவர்களது மார்க்கெட் உச்சத்தில் நிற்கிறது. இரண்டு பேருமே கதையின் நாயகிகளாக வலம் வருகிறார்கள். அதனால் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகள் இவர்களை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறுகையில், தற்போதைய நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா இருவருமே என்னை பெரிதாக கவர்ந்த நடிகைகளாகி விட்டனர். அவர்கள் ஏற்று நடிக்கிற கதாபாத்திரங்கள் வித்தியாசமாக உள்ளது. அதனால்தான் நீண்டகாலமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். இப்போது கதையின் நாயகிகளாக தங்களுக்கென்று ஒரு வியாபார வட்டாரத்தை உருவாக்கி விட்டனர்.
அதனால் தற்போது நான் வழக்கமான நாயகி வேடங்களில் நடித்து வந்தபோதும், எதிர்காலத்தில் அவர்களைப் போன்று கதையின் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக உள்ளது என்கிறார் ரகுல்பிரீத்சிங்.