ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அர்ஜூன் ரெட்டி தெலுங்குப்படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் நடிப்பவர், தமிழில், ஜி.வி.பிரகாசுடன் 100 % லவ், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் மேலும் சில படங்களில் நடிக்கவும் கையெழுத்திட்டுள்ளார்.
இதுபற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், அர்ஜூன் ரெட்டி என்ற படத்தில் நான் நடித்த பிரீத்தி கேரக்டர் என்னை பெருவாரியான மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டது. நான் எங்கு சென்றாலும் பிரீத்தி என்றுதான் மக்கள் அழைக்கிறார்கள். அதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்படுகிறேன். மக்களின் அன்புக்கு பாத்திரமாகிவிட்டேன்.
என்றாலும், அந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றி, புகழை என் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. நான் எப்போதும் போலவே கேசுவலாக இருக்கிறேன். அப்படி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது போன்று தமிழில் நடித்து வரும் படங்கள் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இப்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் ஷாலினி பாண்டே.